Sunday 7 October 2012

செய்யில் சேய்!- கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)



                                                              செய்யில் சேய்!

சேற்றுவயல்   தன்னிலங்கு    ஏற்றமிகு            மாதர்கள்
நாற்றுமுடி       கட்டெடுத்து    நாலெண்ணிப்   பக்குவமாய்
சேற்றழுத்தி    ஆழ்த்துவிரல் தன்னளவில்      நட்டுழைக்கும்
ஆற்றலதைச்  சாற்றுவது      அம்மவோ           இயலாது!
நாற்றனைய   பிஞ்சொன்று  தன்கைகள்           ஜோடிதனில்
தேற்றமாய்    கட்டுநாற்று     ஏற்றுச்செல்       பெண்பிள்ளை
"தோற்றிடாது  வேளாண்மை" பின்னாளில்  இவ்விளையர்
ஏற்றங்கள்   சேர்ப்பதுவாய்     நண்ணிடுது          மாமகிழ்வே!

-கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

பட உதவி: தென்றல் சசிகலா

2 comments:

  1. தங்களின் பாராட்டு மகிழ்வளித்தது! நன்றி!

    ReplyDelete