Sunday 5 January 2014

காப்புக்கவிதை-பாபா அருள் வேட்டல்!



மாண்புதுவை    இலாச்பேட்டை   சீநிவாசப்      பேர்நகரில்

விண்ணூர்தி     சேர்முனையச்    சாலைசேர்   அக்‌ஷயமாம்

நண்ணுவார்க்கு   வேண்டுவன     நாட்டமொடு  ஈகின்ற

சீரடியின்         சாயிபாபா       நேரமர்ந்து    கண்புகுந்து

உள்ளத்தே       மன்னுகின்ற     உன்னதத்தால் பேருவப்பே!

தள்ளரிய        தேவனவன்      தந்திடுக       நற்காப்பே!

விள்ளரிய       நல்வியாழன்    சீர்விரதம்      ஏற்றிட்டு

அள்ளிடுவோம்  நேரருளை      அன்னவனின்   வாழ்த்தாலே!

-கவிஞர் கணக்காயன்(இ.சே.இராமன்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

7 comments:

  1. ஷீரடி சாய் அருள் வேண்டி அருமையான கவிதை.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

      Delete
  2. வரிகள் மிகவும் அருமை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

      Delete
  3. வணக்கம்
    ஐயா.
    பாபா பற்றிய கவிதையின் வரிகள் அற்புதமாக உள்ளது.. தொடரஎனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

      Delete