Wednesday 18 December 2013

ஓவியக்கவிதை!-கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

அன்பு நண்பர், என் வலைப்பூவின் தந்தை திரு.வெங்கட்நாகராஜ் அவர்களின் அழைப்பினை ஏற்று, மேலே உள்ள ஓவியத்திற்காக நான் எழுதிய கவிதை இதோ உங்கள் பார்வைக்கு!


 பூமணக்கும்                     நற்சோலை          உண்கனியீன்    நீள்மரங்கள்!
 தூநிழல்சேர்                    மண்டபத்தின்       சூழலண்மை     நல்லிருக்கை!
 மூதன்பின்                நாயகனின்             முன்னமர்ந்த          காரிகையாள்!
 ஊட்டமிகு                        கார்குழலில்          துய்வெண்மை      கந்தமலர்
 சூடிநிற்கும்                       நேரிழையாள்       உள்ளபடி                 நாற்குணமும்
 துய்யதுவாய்க்               கைவளையும்       காற்சிலம்பும்        நன்கமைந்த
 நுண்ணியநல்                 குங்குமத்தாள்!     கச்சீர்க்கும்             பின்னழகால்
 முன்சரியும்                      நற்சேலை            நல்லுவப்பால்       நேர் ஈர்க்கும்
 கார்வண்டும்                   தேனீயும்                    பூமதுவை             ஏற்பதனை
 அன்னவளைக்              கொட்டிடுமோ?        என்றவந்தான்      ஓட்டுவதை

 தந்துள்ளீர்                       சித்திரமாய் !                ஓவியப்பா            ஏற்பீரே!

                                                               கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

குறிப்பு:
என் நண்பர் தன்னுடைய வலைப்பூவில் இதை வெளியிட்டுள்ளார். அதற்கான சுட்டி இதோ!   http://venkatnagaraj.blogspot.com/2013/12/1.html
அவருக்கு என் உளமார்ந்த நன்றிகள்!

படியுங்கள்! தங்களின் கருத்துகளைப் பதியுங்கள்! நன்றி!

2 comments:

  1. தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete