Thursday 16 February 2012

விருதுக்கு நன்றி!-கணக்காயன்(இ.சே.இராமன்)

வலைப்பூ அன்பர்களுக்கு வணக்கம்!

எனக்கு இரு விருதுகள் வழங்கப்பட்டுளதை அறிந்ததும் மகிழ்வுற்றேன்.
விருதுகளை வழங்கியவருக்கு என் நன்றி! இந்த வலைப்பூவை ஏற்படுத்த காரணமாய் இருந்த திரு வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு இத் தருணத்தில் மிகுந்த நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறேன். இந்த விருதினைப் பெற்ற அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்.

எனக்குப் பிடித்த 7 விஷயங்கள்:

1. தமிழில் இலக்கியம், உரைநடை, கவிதை, கட்டுரை ப்டிப்பது மற்றும்
    கவிதை, கட்டுரைகள் படைப்பது.

2. கவியரங்கங்களில் பங்கேற்பது.

3.ஒத்த ரசனையுடைய அன்பர்களுடன் அளவளாவுவது.

4. நண்பர்களை சந்தித்து உரையாடுவது.

5. என்னுடைய பெயரன், பெயர்த்திகளுடைய திறமைகளைக் கண்டு வியந்து போற்றுவது.

6. அரசியல் சார்ந்த செய்திகளை அவ்வப்போது படிப்பது

7. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முக்கிய நிகழ்வுகளில் இயன்றவரை தவறாமல் கலந்துகொள்வது.

எனக்கு அளித்த இவ்விரண்டு விருதுகளை பின்வரும் வலைப்பூ நண்பர்களுக்கு அளிக்க விழைகிறேன்.



1. திரு எஸ்.ஏ.சரவணக்குமார் http://nellaikavisasaravanakumar.blogspot.in/

2. கோவை2தில்லி http://kovai2delhi.blogspot.in/

3. தமிழ் பேரன்ட்ஸ்http://www.tamilparents.com/

4.குறைஒன்றுமில்லைhttp://echumi.blogspot.in/

5. திரு துரை டேனியல் http://duraidaniel.blogspot.in/

 

விருதுகளை வழங்கிய காரஞ்சன்(சேஷ்) அவர்களுக்கும், என்னிடமிருந்து பெறுபவர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி! நன்றி! நெஞ்சார்ந்த நன்றி!

கவிஞர் கணக்காயன்
(இ.சே.இராமன்)