Saturday 15 September 2012

இமை! -கவிஞர் கணக்காயன்


இமை!

கண்அனைய        கேள்வருக்கு காண்இமையே நன்மனைவி!
அண்ணனுக்குத் தம்பியரும்      அங்ஙனமே         நேரமைவர்!
மண்ணாளும்       சீர்முதல்வர்    மாண்பிரதமர்      அன்னவர்க்குத்
திண்ணமாக          நிர்வாக            ஊழியர்கள்            அத்தகையோர்!
வாழ்மதலை         யாவர்க்கும்     தாய்தந்தை           அப்படியே!
கண்ணிரண்டைக்   காப்பதுவும் மேல்கீழாம்         சீரிமையே!
கண்ணுக்குள்       பாவையாய்     கண்டிடுவோம் பெண்ணிணத்தை!
கண்இமையார்    தேவரெனல்    கற்பனையோ?   உண்மையோ?

-கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)