வலைப்பூ அன்பர்களுக்கு என் இனிய காலை வணக்கங்கள்!
நீண்ட இடைவெளிக்குப் பின் திரு.வெங்கட் நாகராஜ் அவர்களின் அழைப்பினை ஏற்று ஒரு கவிதை படைத்துள்ளேன்!
சிற்றூரின் நீள்சாலை, ஓர்பக்கம் நன்நீழல்
சுற்றுமுள ஓங்குமரம், சுந்தரியாள் அங்கமர,
பற்றோடும் ஈரன்னம், பக்குவமாய் நீருணியில்,
நற்றவமே ஆற்றல்போல், தம்மன்பை நேர்பகிர்ந்து,
புற்றரையின் மாதினுக்கு புத்திமதி சொல்கிறதோ?
வற்றாத நல்லுறவு வாகாகப் பெற்றிடற்கே!
காற்றாலே ஊருணியின் நீர்ப்பரப்பில் காண்சலனம்,
ஏற்றாற்போல் தாமரைப்பூ கூம்பியவை சற்றசைவு,
ஆற்றாமை நெஞ்சத்தே, ஆறலைக்கும் எண்ணங்கள்
சேற்றினிலே வாழ்தவளை சேர்த்தொலிக்கும் சத்தங்கள்,
தோற்றமாம் பல்மீன்கள் ஒக்கனவாய் நீந்துமெழில்,
தேற்றத்தைத் தந்திடுமோ ஏந்திழைக்கு இச்சூழல்?
மாற்றமிலா ஏமாற்றம் மாணிழைக்கு எஞ்சிடுமோ?
-கவிஞர் கணக்காயன்.